கெஹெலியவின் கருத்து முட்டாள்தனமானது என்கிறார் -முன்னாள் கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர்

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறையும் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது முட்டாள்த்தனமான கருத்து என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை மாகாணங்களிடம் கையளிப்பது எவ்விதம் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை குறைப்பதாக அமையும் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வியெழுப்பினார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கி பாராளுமன்றத்தின் அதிகாரங்களை குறைப்பதால் பாராளுமன்றத்துக்கு 150 குண்டுகளையேனும் வைக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறிய கருத்துக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கின் முன்னாள் முதல்வர்,

மாகாணங்களுக்கேயுரித்தான பல அதிகாரங்களை மாகாணங்களின் விருப்புக்களுக்கு அப்பால் பலாத்கராமாக மத்திய அரசு இன்று கையாண்டு வருகின்றது,
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கக் கூடாது என்று சொல்வதற்கு மாகாண சபைகள் ஒன்றும் சட்ட விரோதமான நிறுவனம் அல்ல என்பதை முட்டாள்த்தனமாக கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும’.

பாராளுமன்றத்தை விட ஜனநாயக ரீதியிலும் மக்களாட்சிக் கோட்பாட்டு ரீதியிலும் 100 வீத மக்களின் வாக்குகளாலேயே தெரிவாகின்றனர்,
ஏனெனில் பாராளுமன்றத்தின் 29 உறுப்பினர்கள் மக்களால் அல்லாமல் தேசியப்பட்டியல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றனர்.

ஆகவே மாகாண சபைகளை எந்தவிதத்திலும் பாராளுமன்றத்தை விட குறைத்து மதிப்பிட முடியாது,

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதன் ஊடாக தாம் பாராளுமன்றத்தில் இருந்தும் செயற்திறன் அற்றவர்கள் என்பதை மக்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும் என்பதனாலேயே அவர்கள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது எனக் கூக்குரலிடுகின்றார்கள்,

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதனூடாக மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் என கூறுபவர்களே குண்டு வைக்கும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் என அவர்களே அவர்களின் கருத்துக்களினூடாக வௌிக்காட்டி நிற்கின்றனர்,

முட்டாள்தனமான கேலிக் கருத்துக்களை கூறுபவர்களை கருத்திலெடுக்காமல் அரசாங்கம் மாகாணங்களு்ககான அதிகாரங்களை வழங்கும் பொறிமுறையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -