உப்பாறு பாலத்திற்கு அருகில் ஹசன் அலி யின் சகோதரர் ஜப்பார் அலியுன் கார் விபத்து


எப்.முபாரக்-

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் காரும் பஸ்சும் மோதியதில் இருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரில் பயணித்த இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் படுகாயமடைந்தவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று(11) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர் மு.காவின் முன்னால் செயலாளர் நாயகம் ஹஸன் அலி மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் ஆகியோரின் சகோதரரான நிந்தவூர் பகுதியைச்சேர்ந்த எம்.டி.ஜப்பார் அலி (57வயது) எனவும் தெரியவருகின்றது.

கிண்ணியாவிலிருந்து மூதூர் பயணித்த பஸ்சும் நிந்தவூரிலிருந்து வந்து கொண்டிருந்த காரும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -