ஏறாவூர் - சவுக்கடி பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.



 ஏ.எம். றிகாஸ்-

(17.10.2017) செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
தன்னாமுனை முருகன் கோயில் வீதியைச்சேர்ந்த 26 வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுசன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளங்காணப்பட்டுள்ளது.
 
இவரது வீட்டின் கூரை வழியாக கயிற்றைக்கட்டி இறங்கிய நபர்கள் இவர்களை தடிகளினால் அடித்துக்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இவரது கணவர் துபாய் நாட்டில் வேலைவாய்ப்பிற்காகச் சென்று ஆறுவருடங்களாகின்றன. அடுத்தமாதம் நாடுதிரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக  கடந்த (17) செவ்வாய்கிழமையன்று நகைகளை அடகு வைத்து சுமார் அறுபதாயிரம் ரூபா பணம் பெற்றுவந்துள்ளார். அத்துடன் அவரது வீட்டில்  30 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகளும் இருந்துள்ளன.
எனினும் இவ்வீட்டில் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.
 
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -