நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -
நுவரெலியா மாவட்டம் கொட்கலை மேபீல்ட் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு மாடி தேயிலைத்தொழிற்சாலை சேதமானதுடன் தேயிலை நூல் முற்றாக சேதமாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை தூல் உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே 02.09.2017 அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து சம்பவித்ததுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர்சேதங்கள் ஏற்படவில்லை .
தீ டீரென தீ பரவிய நிலையில் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து 1 மணித்தியாலங்களின் பின்னர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவலுக்கன காரணம் இது வரையில் கண்டியாத போதிலும் நான்கு மாடி கட்டிடத்தை கொண்ட தேயிலை தொழிற்சாலை பின் உற்பகுதி முழுமையாக சேதமாகியுள்ளது தேயிலை அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் தேயிலை தூல் ஆகியன முற்றாக சேதமாகியதாகவும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலும் சேத விபரம் தொடர்பிலுமான விசாரணையை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.