விறகு வெட்ட சென்ற தாய் பரிதாபமான நிலையில் உயிரிழப்பு



க.கிஷாந்தன்-

யகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்ட சென்ற தாய் ஒருவரின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமான நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் 20.09.2017 அன்று மாலை 6 மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான மயில்வாகனம் இந்திராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தனது வீட்டின் தேவைக்கு விறகு வெட்ட சென்றபோது, தாய் விறகு வெட்டிக் கொண்டிருந்த வேளையில் மற்றுமொரு நபர் குறித்த மரத்தை வெட்டும் பொழுது குறித்த மரம் கீழே மர குற்றிகளை தரித்துக் கொண்டிருந்த மேற்படி தாய் மீது முதுகு பகுதியில் விழுந்ததில் ஸ்தலத்தியே தாய் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -