மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-


லையக மக்கள் முன்னணியின் இளைஞர் முன்னணி தேசிய மாநாடு எதிர்வரும் 16.9.2017 சனிக்கிழமை கொட்டக்கலை ஆலய மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.


மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அரவிந்தகுமார் ஆகியோரின் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.


இம்மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாலேந்திரன், அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.


மேலும் வெளிநாட்டு அரசியல் வாதிகள், மலேசியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன், கொரியா நாட்டின் இளைஞர் குழுவினர், அரசியல் பிரமுகர்கள்,மலையக மக்கள் முன்னணியின் உயர் பீட உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.


எனவே அனைவரையும் வருக வருக என அந்தக் கட்சியின் இளைஞர் அணி அமைப்பு அழைப்பிதல் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -