மியன்மார் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத நிலைமை குறித்து ஐ,நா வெட்கப்பட வேண்டும்-முதலமைச்சர்

மியன்மாரில் நடக்கும் கொடூரங்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை எண்ணி ஐக்கிய நாடுகள் சபையும் உ லக நாடுகளும் வெட்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

மியன்மாரில் பச்சிளங் குழந்தைகள் கொல்லப்படும் போதும் கர்ப்பணிப் பெண்களின் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டு இருப்பது கண்முன்னே மனிதாபிமானம் கண்முன்னே குழிதோண்டி புதைக்கப்படுவதை ரசித்துப பார்த்துக்கொண்டிருப்பதற்கு சம்மாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,

காத்தான்குடியின் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வாக இயற்கைப் பசளைத் தயாரிப்பு நிலையத்தை விஸ்தரிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

மியன்மாரில் பச்சிளம் பாலகர்கள் கொலை செய்யப்படங்களையும் மனிதர்கள் கொடூரமாக நடத்தப்படுவதையும் பார்க்கின்றபோது எமது உள்ளங்கள் பதை பதைக்கின்றன,

உலகின் மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்கும் ஐக்கிய நாடுகளும் வல்லரசுகளும் மியன்மார் விடயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வது வரலாற்றும் துரோகமாகும்,

சாமாதானத்திற்கு போராடியவர் என்ற நோபல் பரிசை வென்ற ஆங் சா சூகி தற்போது மியன்மாரின் ஆட்சி பீடத்தில் உள்ள நிலையில் அவர் காக்கும்மௌனமும் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றன.

இதன் பின்னணியில் ஒரு சதிக் கூட்டுசெயற்படுகின்றதா என்றகேள்வியுடன் கொலையாளிகளை பாதுகாப்பதற்கான பின்னணி பாரிய திட்டமிடலுடான ஏற்பாடுகளுடன் அரங்கேறுகின்றதாக என்றகேள்வியும் தற்போது எழுகின்றது,

எனவே ஏற்கனவே மனிதாபிமான மீறல்கள்தொடர்பில் பல நாடுகளுக்கு விரல் நீட்டும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் மௌனம் நாடுகள் தொடர்பில் அதன் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்பதாகவே உணர முடிகின்றது,

ஆகவே விலை மதிக்க முடியாத அப்பாவி மனித உயிர்களைப் பாதுக்காக்க இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்த்தை கொடுக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -