யாருடன் போவது எண்ண செய்வது என்று அறியாமல் சாவல் விடுத்து வருவதை வேடிக்கையாக இருக்கின்றது - அமைச்சர் திகா

க.கிஷாந்தன்-

திர்வரும் மலையக மாற்றம் இளைஞர் கைகளில் விடப்படுகிறது என பெருமிதம் தெரிவிக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம் அடுத்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் ஒட்டு மொத்த பிரதேச சபை, நகர சபைகளை எமது இளைஞர்கள் ஆட்சி கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

மலையகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் முதலானவற்றை அகற்றி, சமூகத்தில் பலம் மிக்க அமைப்பொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில், “திகா மன்றம்” எனும் புதிய அமைப்பொன்று, “ஒரு புதிய மாற்றத்துக்கான ஆரம்பம்” என்ற தொனிப்பொருளில் அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் 17.09.2017 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர் உரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

மலையகத்தை மாற்றம் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் செய்து வருகின்றோம். சிலர் நானே மலையக தலைவன் எனக் கூறி கொண்டு கருப்பு கண்ணாடியை அணிந்த வண்ணம் நாம் செய்யும் சேவைகள் என்னவென்று தெரியாது முடிந்தால் தனியாக வா என சவால் விடுகின்றார்.

ஆனால் எதையுமே செய்யக்கூடிய நிலை தடுமாறிய நிலையில் யாருடன் போவது எண்ண செய்வது என்று அறியாமல் சாவல் விடுத்து வருவதை வேடிக்கையாக எண்ணுகின்றோம்.

தனியாக 2006ம் ஆண்டு போட்டியிட்டு பிரதேச சபைகளை வெற்றிக்கொண்டோம். இவ்வாறு சவால் விடும் தலைவருக்கு இது தெரியாத ? மலையக மக்களுக்காக எத்தனையோ தலைவர்கள் சேவை செய்திருந்தாலும் இராஜலிங்கம், வீ.கே.வெள்ளையன், சந்திரசேகரன் போன்ற தலைவர்கள் இம்மக்களுக்கு உண்மையான சேவையை செய்தார்கள். காலம் காலமாக மலையக மக்களை லயத்து வாழ்க்கையில் வைத்து குளிர் காயந்தவர்களை இன்று ஓரம் கட்டியுள்ளோம்.

தாத்தா, மகன், பேரன் என தேர்தல் காலங்களில் ஓட்டு போட்டுக் கொண்டு வந்த நிலையில் இப்பொழுது கொல்லு பேரணுக்கும் போட்டி போடும் நிலை வந்துள்ளது. இதனை மக்களாகிய நீங்களே தீரமானிக்க வேண்டும்.

திகா மன்றம் ஒன்றை ஆரம்பிக்குமாறும், இதனூடாக மலையக மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும் இளைஞர்களே வழியுறுத்தினார்கள். இதற்கமைவாக இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டு அப்பாவி மக்களாகிய மலையக மக்களுக்கு நேரடி சேவைகள் சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் எதிர்கால மலையகம் இளைஞர் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் மது இல்லாமல் சேவை செய்ய இளைஞர்கள் முன் வந்தனர். ஏனையவர்கள் மது அல்லது சாராயம் வழங்கி வாக்குகளை பெற்றனர். ஆனால் ஒட்டு மொத்த மலையக மக்களில் இலட்சக்கணக்கானோர் எனக்கெ வாக்களித்தனர்.

இனிமேலும் மலையகத்தில் காணப்படும் துரோகிகளுக்கு அங்கு இடமில்லை. இவ்வாறான துரோகிகளை இளைஞர்கள் விட்டு வைக்கவும் கூடாது. யார் சேவை செய்கின்றார்கள் என்பதை அறிந்து அவர்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும். இனி மலையகத்தில் கொம்பன்கள் யாரும் இல்லை. ஆட்சியில், அதிகாரத்திலும் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மலையக மக்களை ஏமாற்ற இடமளியேன் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -