தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் ஆனந்தசங்கரி மலையகத்திற்கு விஜயம்







க.கிஷாந்தன்-

“ஈடோஸ்” அமைப்பான இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு அதன் 12 வது ஆண்டு விழாவினை மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் கொண்டாடியது.

இந்த நிகழ்வு 05.09.2017 அன்று காலை அமைப்பின் பிரதானிம் நிகழ்வின் அமைப்பாளருமான முன்னால் யாழ். மாநகர சபை உறுப்பினருமான இராமையா சங்கையன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி உள்ளிட்ட லண்டனில் இருந்து வருகை தந்த சட்டத்தரணி பரமசிவம் ஸ்ரீதரன், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஸ் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் “ஈடோஸ்” சிறு பராய கல்வி அபிவிருத்தி நிலைய சிறார்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -