கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டஏறாவூர் அரபா வித்தியாலத்திற்கான மூன்று மாடிக் கட்டடிடம் முதலமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர் ஷிப்லி பாறூக்மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் கல்வி அதிகாரிகள் அதிபர்,ஆசிரியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினால் குறித்த கட்டடநிர்மாணத்திற்கு 90 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டு கட்டட வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன,
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சேவைகளை பாராட்டி அவருக்கு கௌரவிக்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது