அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் இரவு நேரத்தில் அனுமதியின்றி வீட்டிற்குள் புகுந்த நபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு இன்று (16) திருகோணமலை நீதிமன்ற நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.
மஹதிவுல்வெவ -சுவர்ணஜயந்தி புர பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பொல்வத்தே கெதர ரூபசிங்க (39வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரின் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த வேளை இரவு நேரத்தில் ஆடைகள் இன்றி உற்புகுந்ததாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே இவர் தொடர்பாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.