அமைச்சர் ஹக்கீம் சிலமணிநேரம் செலவிட்டிருந்தால் தம்புள்ளை பள்ளிவிவகாரத்தை எப்போதே தீர்த்திருக்கலாம்.-அமைச்சர் ரிஷாட்



ஊடகப்பிரிவு-

100நாள் நல்லாட்சியில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்றிரவு (22.08.2017) அமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் வழியாக இடம்பெற்ற மக்கள் குரல் நேரடி கேள்வி பதில் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிர்வாகம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஞ்சித் அலுவிகாரவுடனும் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம். தம்புள்ளை பள்ளிக்கான காணியையும், பாதிக்கப்பட்ட 16குடும்பங்களுக்கான காணியையும் ஒதுக்கீடு செய்வது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக் காணிக்கு 20பேர்ச் தருவதாக தெரிவிக்கப்பட்ட போதும, பள்ளி நிர்வாகம் அதன் அளவு பிரமாணத்தை அதிகரித்து தரவேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்ததும் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபா 20லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபா 5லட்சமும் வழங்குவதற்கு ஏகமனதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கிணங்க, புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்;பித்திருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரப்பட்ட தொகை அதிகம் எனவும், அவ்வாறு வழங்கினால் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட ஏனையோர்களுக்கும் இவ்வாறான தொகையை வழங்கவேண்டி நேரிடும் எனவும் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர். எனினும், இந்த விவகாரத்தை மனிதாபிமானரீதியிலும் விஷேடமாகவும் கருத்திற்கொள்ளவேண்டிய அவசியம் குறித்து பல அமைச்சர்கள் விளக்கினர்.

அமைச்சர்களான ராஜித, மங்கள, றவூப் ஹக்கீம் கபீர் காசிம், தயாசிறீஜயசேகர, அனுரபிரியதர்சனயாப்பா, ஹலீம், நான் உட்பட இந்த பத்திரத்தை ஏகமனதாக அங்கீகரிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம். மிகவிரைவில்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கிடைக்க வழி பிறக்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -