என்ன நடக்கிறது?! நாம் என்ன செய்ய வேண்டும்?! 'தேசத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் விசேட கலந்துரையாடல்




ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

றுமலர்ச்சி இயக்கமும், தேசிய சூறா சபையின் சகவாழ்வுப் பிரிவும் இணைந்து நடாத்தி வரும் 'தேசத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் விசேட கலந்துரையாடல் நிந்தவூர் நலன்புரிச் சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபைத் தலைவருமான அல்ஹாஜ்.எம்.எச்.யாக்கூப் ஹசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; ராவய பத்திரிகை முன்னாள் பிரதம ஆசிரியரும், அரசியல் ஆய்வாளருமான விக்டர் ஐவன் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின்; கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவரெத்ன பண்டார, கம்பஹா மாவட்ட முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.எம்.பிரேமவர்டன, மற்றும், தேசிய சூறா சபையின் சகவாழ்வுப் பிரிவின் உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.பௌசான், ஜலீல் மௌலவி, முனீர் மௌலவி உள்ளிட்டோருடன் நிந்தவூர் பிரதேச கல்விமான்கள், இளம் அரசியல் பிரமுகர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -