முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முதல் முதலாக அட்டாளைச்சேனையில் அறிமுகப்படுத்தியவன் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

ட்டாளைச்சேனை மண்ணில் நடைபெறும் இந்த பிரமாண்டமான இப் பொதுக்கூட்டத்தைப் பார்க்கும்போது நான் மிகவும் பெருமிதமடைகிறேன். ஏனெனில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1980ம் ஆண்டு இக்கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவனாக இருந்ததனால் இதனை இவ்வூரிலும் முதல் முதலில் அறிமுகப்படுத்தி அதற்கான முதல் கருத்தரங்கில் தலைமை வகித்து பேசியவன் அடியேனாவேன். 

 அந் நிகழ்வில் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதையும் இங்கு திரண்டிருக்கும் போராளிகளுக்கும் மற்ற கட்சியின் முக்கிய முன்வரிசை உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தி விளங்கப்படுத்த விரும்புகிறேன் என மு.கா.வின் ஸ்தாப பொதுச் செயலாளரும் அக் கட்சியின் அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் அண்மையில் அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.

மேற்படி கூட்டம் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஏ.ஏல்.எம். நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோதே கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்;ரப் அவர்கள் மரணமாகி ஒரு சில தினங்களுக்குள் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக கூட்டப்பட்ட விஷேட அரசியல் உச்சபீட கூட்டத்தில் கூட தலைமைத்துவ தெரிவின்போது பலர் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். இன்னும் சிலர் இத் தலைரை எதிர்த்தார்கள் ஆனால் அன்று எங்களைப்போன்றவர்கள்தான் இப்போதுள்ள தலைவருக்கு ஆதரவாக பேசியவர்களில் நானும் ஒருவன் என்பதை இத்தருனத்தில் இவ்விடத்தில் அதனை ஞாபகமூட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இன்றைய உயர்பீடத்தில் இருப்பவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் கூட அக்கூட்டத்தில் அன்று அவர்கள் கலந்து கொள்ள முடியாத வாய்பில்லாதவர்களாகத்தான் இருந்தார்கள் இதுதான் வரலாறு. இருப்பினும் இறுதியில் அன்றுமுதல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தலைமைத்துவத்துக்கு எதிராக பலர் பலவருடங்களுக்கு பின்பு குற்றச்சாட்டுகளும் குறைகளும் கண்டு வருகின்றார்கள். கட்சியின் மூலம் பலனும், பயனும், பதவிகளும் பெற்றுவிட்டு இன்று நம்பிக்கைத்துரோகமாக நடந்துகொள்வது ஒரு நாகரீகமான செயலாக கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


மேற்படி கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் கௌரவ அமைச்சருமான றவூப் ஹக்கிம், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான எ.எல். தவம், சிப்லி பாறுக் போன்றவர்கள் உட்பட கட்சியின் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களும், ஊர் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -