ஷிப்லி பாறுக்கின் தொடர் முயற்சியினால் விடுதி வீதியின் உள்ளக ஒழுங்கைகள் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு



எம்.ரீ. ஹைதர் அலி-

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தொடர் முயற்சியினால் விடுதி வீதியின் உள்ளக ஒழுங்கைகள் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக காத்தான்குடி விடுதி வீதியின் உள்ளக ஒழுங்கைகள் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதற்கென கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினூடாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் விடுதி வீதி முதலாம், மூன்றாம் ஒழுங்கைகளின் புனரமைப்பு பணிகளுக்காக 4,680,000.00 ரூபாயும், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஒழுங்கைகளின் புனரமைப்பு வேலைகளுக்காக 4,605,000.00 ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக புனரமைப்புச் செய்யப்படவுள்ள விடுதி வீதி முதலாம் ஒழுங்கை பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் அப்பகுதியிலுள்ள மக்களை சந்தித்து புனரமைப்பு பணிகள் தொடர்பான மக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டார்.

மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமலிருந்த குறித்த வீதிகளை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கு இதன்போது மக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -