ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இருபதாவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் புதிர் இறுதிப் போட்டியில் ஏறாவூர் அறபா வி;த்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலிருந்து இரண்டு சுற்றுக்களாக நடைபெற்ற போட்டிகளிலிருந்து மாவட்ட மட்டப் போட்டிக்காக மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து ஆரையம்பதி மகா வித்;தியாலயமும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து ஏறாவூர் அறபா வி;த்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இறுதிப் போட்டி மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவ் இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது ஏறாவூர் அறபா வி;த்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றதுடன், ஆரையம்பதி மகா வி;த்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதனடிப்படையில் மாகாண மட்டப்போட்டிக்காக ஏறாவூர் அறபா வி;த்தியாலயம் தெரிவு செய்யப்பட்டது.