ஓட்டமாவடி - காவத்தமுனையில் திரியபியச வீட்டினை உரிமையாளர்களிடம் கையளிப்பு.


எச்.எம்.எம்.பர்ஸான்-

முர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில் வீடற்ற மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்காக ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதி மற்றும் பாலப் பண்ணை வீதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம்.சாஜஹான் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டினை கையளித்து வைத்தார். நிகழ்வின் ஏனைய அதிதிகளாக சமுர்த்தி தலைமயக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -