பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதிப் பங்களிப்புடன் ஆற்றங்கரை அல்-அக்ஸா மீன்பிடி சங்கத்தினால் புதிய சுற்றுலா படகு சவாரி சேவை ஆரம்பம்
காத்தான்குடி அல்-அக்ஸா ஆற்றங்கரை மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாவி சுற்றுலா படக்குச் சவாரி சேவை ஒன்று 2017.07.05ஆந்திகதி-புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்படகுச் சேவையினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இச்சுற்றுலாப் படகுச் சேவையினூடாக மண்முனை, முதலைக்குடா, சிரையா தீவு, கரையக்கண் தீவு, பெரியகளம், கல்லடி, முகத்துவாரம் உள்ளிட்ட ஏனைய சிறு படகுச் சவாரிகளையும் பயணிகள் மேற்கொள்ள முடியும்.
காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் இயற்கையோடு ஒருமித்த இவ்வாவிச் சுற்றுலா சேவையானது சிறுவர்கள் மற்றும் படகுச் சவாரி பிரியர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறந்த பொழுதுபோக்கு திட்டங்களை ஊக்குவிக்கும் முகமாக, இப்படகுச் சவாரி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படகின் கூரையினை அமைப்பதற்கான முழுமையான செலவினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


