நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் கார் விபத்து



க.கிஷாந்தன்-

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் 29.07.2017 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் தெய்வாதீனமாக இளைஞர்கள் மூவர் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த கார் நுவரெலியாவிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் வழியில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த பாரவூர்த்திக்கு இடமளிக்க முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் காரில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -