பாறுக் ஷிஹான்-
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான முக்கிய சாட்சியப்பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நீதிபதிகள் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினுள் செல்லும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு முதன்முறையாக இன்று(20) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதாய விளக்கம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குறித்த சாட்சியப்பதிவு இடம்பெற்று வருகின்றது.
வழக்கின் விசாரணைகள் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய தினம் (20) மேலதிக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வழமைக்கு மாறாக நீதிமன்றின் உள்ளேயும் வெளியேயும் சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
