விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி ஜனூஸ் சற்று முன்னர் வபாத்..!

எச்.எம்.எம்.பர்ஸான்-
நேற்று 20.07.2017ம் திகதி பிற்பகல் ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி- பஸ் விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி-3ம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சுலைமா லெப்பை ஜனூஸ் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் வபாத்தானார். ’’இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜியூன்’’

அப்டேட்:-
அனா-
ட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி வெளியே வீசப்பட்டு கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மரணமடைந்தவர் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுலைமா லெப்பை ஜனூஸ் (வயது 27) என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞரும், பஸ்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவரின் ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் நாளை சனிக்கிழமை ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -