மீராவோடை வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் திறப்பு விழா.!

கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக (2016) சுமார் 5.4 மில்லியன் ரூபா செலவில் ஓட்டமாவடி மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு(ETU) கட்டடம் எதிர்வரும் 13.07.2017 (வியாழக்கிழமை) மதியம் 12.00 மணிக்கு கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்த திறப்புவிழா நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர் , கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கௌரவ கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்குமாகாணசபையின் பிரதி தவிசாளர் கௌரவ இந்திரகுமார் நித்தியானந்தன், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் , கௌரவ ராசையா துரைரட்ணம் , கௌரவ கோவிந்தன் கருணாகரம், கௌரவ மார்க்கண்டு நடராஜா, கௌரவ ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை , சுகாதார அமைச்சின் செயலாளர் K.கருணாகரன் மற்றும் கிழக்குமாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் K.முருகானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திருமதி LM.நவரட்னராஜா ஆகியோரும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,
வாழைச்சேனை (மு.ஊ.பி).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -