இரத்மலான சதொசவுக்கு சீனி கொண்டுவரப்பட்ட கொள்கலனுக்குள் -கொக்கெயின் கண்டுபிடிப்பு

ஊடகப்பிரிவு-

த்மலான சதொச வெயார் கௌசிற்கு கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சீனியுடன் 10 வித்தியாசமான பார்சல்கள் காணப்பட்டதனால், அது தொடர்பில் கல்கிசைப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த கொள்கலனை தமது நிறுவனம் கல்கிசைப் பொலிசிடம் ஒப்படைத்தது என்று சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார். பின்னர் ஒவ்வொரு பார்சலிலும் தலா பதினாறு கிலோ கிராம் அடங்கிய 160 கிலோ கிராம் கொக்கெயின் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம். கே.பி.தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சதொச நிறுவனத்துக்கான சீனி வாரா வாரம் டெண்டர் அடிப்படையிலேயே கோரப்பட்டு கொள்வனவு செய்யப்படுவதே நடைமுறை. அந்த வகையில் இந்த வாரம் ரஞ்சிதா பிரைவட் லிமிட்டட் நிறுவனமே டெண்டரில் தெரிவாகியது. அந்த நிறுவனத்தினால் கொழும்புத் துறைமுகத்திலிருந்து இரத்மலான வெயார் கௌசுக்கு கொண்டுவரப்பட்டிருந்த சீனியிலேயே இந்த சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் இருப்பதை ஊழியர்கள் கண்டதனால் அங்குள்ள அதிகாரிகளுக்கும் எனக்கும் இந்த விடயத்தை அறிவித்தனர். அதன் பின்னரேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் என்றும் சதொச நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -