நிகழ்வில் போடப்பட்ட கதிரையை திருடிய இருவருக்கு தலைகீழாக தொங்கவிட்டு தண்டனை

பீகார் மாநிலம் கைமூர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சிக்காக போடப்பட்ட நாற்காலியை இரண்டு பேர் திருடிச் சென்றதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக குரல் எழுப்பி மக்களை திரட்டிய அவர்கள் இருவரையும் பிடித்து கயிற்றால் கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளனர். தலைகீழாக தொங்கவிட்டுள்ள இருவரையும் அப்பகுதி மக்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

நீண்ட நேரம் தலைகீழாக தொங்கிய அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து சென்றனர். நாற்காலி திருடியதற்காக இருவரையும் தலைகீழாக கட்டி வைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -