பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

க்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று(05) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.

இரு வாரங்களுக்குப் பின்னர் ஆணைக்குழு இன்று கூடுகின்றது. நீதிபதியொருவர் வெளிநாடு சென்றிருந்ததனால் விசாரணைகள் இரு வாரங்கள் இடம்பெறவில்லை.

கோப் அறிக்கையின் அடிப்படை தகவல்கள் பற்றி அமைச்சரிடம் விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வசந்த டி அல்விசும் இன்று சாட்சிகள் வழங்க ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -