நீர் விநியோகஸ்தர் உரிமம் பெற்றுத்தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களை மடக்கிக்கொடுத்த யாழ் மக்கள்

யாழ். மாவட்டத்திற்கான நீர் விநியோகஸ்தர் உரிமத்தை பெற்றுத்தருவதாக கூறி பலரின் பணத்தை கொள்ளையிட்டவர்கள், பாதிக்கப்பட்டோரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர் தயாரிப்பு நிறுவனமொன்றைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள், யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களால் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கும் அதிகமானவர்களிடம் இவர்கள் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைக்காக யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றி, சுமார் 3 தொடக்கம் நான்கு கோடி வரையான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(ஆ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -