ஞான­சார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் - பொலிஸ் மா அதிபர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் எனவும் அது தொடர்பில் யாரும் எவ்­வித சந்­தே­கமும் கொள்ளத் தேவை இல்லை என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்தார். 

இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்­களை கட­மையில் ஈடு­ப­டுத்­தி­யுள்ள நிலையில் குற்­ற­மி­ழைத்த எவ­ரையும் தப்­பிக்க விடப் போவ­தில்லை, ஞான­சா­ரரின் கைது உறு­தி­யா­னது எனவும் நீதி­மன்ற உத்­த­ர­வுகள், சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்பு நட­வ­டிக்­கை­யாக அது இடம்­பெறும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர சுட்­டிக்­காட்­டினார்.

யாழ். பொலிஸ் பிராந்­தி­யத்தில் உள்ள 43 பொலிஸ் நிலை­யங்கள் ஊடாக சேக­ரிக்­கப்பட்ட அனர்த்த நிவா­ரணப் பொருட்­களை நேற்று முன் தினம் பம்­ப­ல­பிட்டி பொலிஸ் காலாற்­படை தலை­மை­ய­கத்தில் வைத்து கையேற்ற பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசும் போதே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர இதனை தெரி­வித்தார்.

பொலிஸ் மா அதிபர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேச ஆரம்­பித்த போது, ' ஞான­சார தேரரை கைது செய்­வ­தாக முதலில் பொலிஸார் கூறினர். அவர் தற்­போது தலை­ம­றை­வா­கி ­விட்டார் அல்­லவா? என ஊட­க­வி­ய­லா­ளர்கள் பொலிஸ் மா அதி­ப­ரிடம் கேட்­டனர். இதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர,சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­னது. சட்­டத்தை யாரா­வது மீறு­வார்­க­ளாயின் அந்த சந்­தர்ப்­பங்­களில் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க நாம் பின் நிற்கப் போவ­தில்லை. அதன்­படி ஞான­சார தேரரைக் கைது செய்ய தற்­போதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான திட்டம் வகுக்­கப்பட்டு விசேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

நீதி மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமை­வாக சட்ட மா அதிபர் திணைக்­களம் ஊடாக பெற்­றுக்­கொண்­டுள்ள விசேட ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக அந் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­கின்­றன. நாம் முன்­னெ­டுக்கும் சிறப்பு நட­வ­டிக்­கை­களின் போது கையா­ளப்­படும் கைது நட­வ­டிக்­கை­களை ஒத்த கைது நட­வ­டிக்கை ஒன்று அவர் தொடர்­பிலும் எடுக்­க­ப்படும் என்­பதை தெளி­வாக கூறு­கின்றேன்.

சில இடங்­களில் பொலிஸார் இந்த விட­யத்தில் பக்கச் சார்­பாக நடந்­து­ கொள்­வ­தாக கூறு­கின்­றனர். உண்­மையில் பொலிஸார் தமது நட­வ­டிக்­கை­களின் போது எந்­த­வொரு இன, மதம் சார்ந்து செயற்­ப­டு­வ­தில்லை. எந்த பக்­கமும் சார்ந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை. யார் குற்றம் இழைத்­தாலும் குற்றம் குற்றம் தான். அதனால் மிக விரைவில் அந்த கைது இடம்­பெற்றே தீரும். எனவே இந்த விட­யத்தில் யாரும் சந்­தேகம் கொள்ளத் தேவையே இல்லை. இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்பட்­டுள்­ளன என்றார்.

இதன்போது ஞான­சார தேரர் மறைந்­தி­ருப்­பதும் கூட ஒரு குற்­ற­மல்­லவா என ஊடகவியலாளர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆம், எனினும் முதலில் அவர் எங்கு உள்ளார் என்பதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். அதன் பின்னர் அவரை நாம் கைது செய்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்' என பதிலளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -