மூதூர், துஷ்பிரயோக சமபவம் : பொது அமைப்புக்களினால் கண்டனப் பேரணி



ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28ம் திகதி மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனை பொது அமைப்புக்களினால் கண்டன பேரணி வியாழக்கிழமை (01.06.2017) வாழைச்சேனையில் இடம்பெற்றது.

இந்தப் பேரணி வாழைச்சேனை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி 10.30 மணியளவில வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை பிரதான வீதி வழியாக பேரணி சென்றடைந்தது.

பேரணிக்கு ஆதரவாக வாழைச்சேனை ஆலயத்தின் ஆலய நிருவாகங்கள், சிவில் அமைப்புக்கள், பெற்றோர்கள், பெண்கள் சமூக அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -