இலங்கையில் தங்கியிருக்கும் மியன்மார், ரோஹிங்யா யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரை நேற்றைய தினம் நுகேகொட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அணிவகுப்பை நடாத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
பொலிஸ் கான்ஸ்டபிளான குறித்த நபர், குற்றம் இடம்பெற்ற நாளிலிருந்து தலைமறைவாகியிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ரோஹிங்யா அகதிப் பெண்ணுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் ஆர்.ஆர்.ரி. அமைப்பு சட்ட உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.