கிண்ணியா பிரதான வீதியில் விபத்து - அப்துல் ஹமீது முகம்மது மலீக் (18) மரணம்

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்-
ம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதி கோயிலடி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் இன்றிரவு (03) 07 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம்.இலக்கம் 54 ஏ சிறாஜ்நகர் பகுதியைச்சேர்ந்த அப்துல் ஹமீது முகம்மது மலீக் (18வயது) எனவும் தெரியவருகின்றது. குறித்த இளைஞன் கிண்ணியா பிரதேசத்திலிருந்து EP BEZ 4209 எனும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நிலையில் மணல் ஏற்றச்சென்ற WP LC-4456 எனும் இலக்க டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் சடலம் கன்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -