அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 07 மில்லியனை வழங்கும் கிழக்கு மாகாண சபை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் உள்ள மக்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மட்ட ஊழியர்கள் சேர்ந்து தமது சொந்த நிதியாக சுமார் 07 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காகவும், கிழக்கு மாகாண சபையின் நிருவனங்களுடாக அம்மக்களுக்கு மேற்கொள்ளக்கூடிய சேவைகள் என்பனவற்றைத் தீர்மானிப்பதற்காகவும், நாளை (01.06.2017, வெள்ளிக்கிழமை) விசேட சபை அமர்வொன்று இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில் "மக்கள் எதிர்பாராத இன்னல் ஒன்றை சந்தித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் இழப்புக்களும் வலிகளும் எம்மை பெரிதும் பாதித்துள்ளது. சகல பாகுபாடுகளுக்கும் அப்பால் ஏக இறைவனிடம் மன்றாடி எம் மக்களின் இன்னலை தீர்க்க வழிவகை செய்ய அனைவரும் பிரார்த்தித்துக் கொள்ளவேண்டிய நேரம் இதுவே. அம்மக்களுக்கான நிவாரண முயற்ச்சியில் ஈடுபடும் அனைவரையும் நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். 

இந்நிலையில், இன மத வேறுபாடற்று எம்மால் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியினையும், ஒரு சிலர் நேற்று என் காது கேட்க திருகோணமலையில் சபை செயலகத்திலேயே விமர்சித்தனர். மனிதர்களை எப்படித் திருப்திப்படுத்துவது என்ற கேள்வி எப்போதும் உண்டுதான். ஆனால், எல்லாவற்றையும் விமர்சிக்கும் ஈனப்பிறவிகளை என்னவென்று சொல்லுவது. இந்த ஈனப்பிறவிகள் சமூக வலைத் தளங்களிலும் இன்று மலிந்து போய்விட்டனர் என்பது இன்னொரு புறம் கவலையாக இருக்கிறது.'' எனவும் கூறினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -