ஏ.எம்.கீத் திருகோணமலை-
கிழக்கு மாகணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் இன்று ( 18.05.2017) காலை 9.30 மணிக்கு அலஸ்தோட்டத்தில் உள்ள தீபம் நிலையத்தில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி க.நிதிதாசன் தலைமையில் டெங்கு பரவலை தடுத்தல் அரச அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு விருந்தினர்களாக கிழக்கு மாகணசபை செயலாளர் திரு டி.எம்.சரத் அபயகுணவர்த்தன அவர்களும், திருகோணமலை மாவட்ட ஆயர் பேரருட்திரு கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களும் யுனிசெப் நிறுவனத்தின் உயர் அதிகரி செல்வி ரீபேன்சியா அவர்களும், திருகோணலை கோட்ட கல்வித்திணைக்களாக அதிகாரி திரு விஜயானந்தமுர்த்தி பொன் செல்வநாயகம் அவர்களும் வைத்திய அதிகாரி திரு அருள்குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன் நிகழ்வுக்கு விருந்தினர் 56து திரு டி.எம்.சரத் அபயகுணவர்த்தன அவர்கள் உரையாற்றும் போது கிழக்கு மாகணத்தில் மக்கள் பாரிய பிரச்சனையை தற்போது முகம் கொடுத்துள்ள நிலையை நாம் காணக்கூடியதாக உள்ளது அது தான் டெங்கு நோய் இக்கால கட்டத்தில் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அவ்வாறு செயற்படும் போது இந்நோய்யை குறைக்கமுடியும் அரச உத்தியோகத்தர்கள் மட்டும் அல்ல அனைத்து மக்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் அத்துடன் புதிய அனுகுமுறைகளை நாம் அறிமுகப்படுத்துட் போது மக்கள் தங்களின் ஒத்துழைப்பை தர வேண்டும் அதற்கு அரச உத்தியாகத்தர்கள் எப்போது தயார் நிலையிலும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று கூறினார்.
அத்துடன் மக்கள் நலன் கருதி இவ்வாறான செயத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் யுனிசெப் நிறுவனத்திற்கும் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறினார் அதனை தொடர்ந்து, திருகோணமலை மவாட்ட ஆயர் பேரருட்திரு கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் மக்கள் சமய கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து வாழ்கின்றார்கள் அவர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலையிலும் , நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு போன்ற நோய்களுக்கு பாரிய சவால்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். மக்கள் மத்தியில் இவ்வாறான நிலை ஏற்படதாவண்ணம் இருக்க வேண்டும் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையை கட்டுப்படுத்துவது நாம் அணைவரதும் கடமையாக உள்ளது. என்பதனை நாம் மறக்க முடியாது ஆகவே நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும் அதனை மக்களிடம் சென்றடைய செய்யும் பாரிய பொறுப்பு எமக்கு உண்டு என்று கூறினார். அதனை தொடர்ந்து செயற்பாடுகள் குழுக்காளகவும் தனியாகவும் நடை பெற்றது.