சட்ட விரோதமான முறையில் கடையொன்றினை கட்டச்சென்றவருக்கு விளக்க மறியல்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை கேனேஷ்வரர் ஆலயத்திற்கருகில் தொள் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோதமான முறையில் கடையொன்றினை கட்டச்சென்றவரை ஜூன் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு இன்று (29) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை.ரேவதபுர பகுதியைச்சேர்ந்த எச்.கே.அஜித் (38வயது) எனவும் தெரியவருகின்றது.

திருகோணமலை கோனேஸ்வரா ஆலயத்திற்கு செல்லும் வழியில் சிறிய கடையொன்று காணப்பட்டிருந்த போதிலும் அக்கடையை எவ்வித அனுமதியுமின்றி விசாலமாக தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் கட்டுவதற்கு முயற்சித்த வேளை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -