ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு, ஏறாவூர் - மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (14.05.2017) தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அப்பெண் வியாழக்கிழமை 18.05.2017 பகல் மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
ஏறாவூர் மிச்நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான சர்மீலா நஸீர் (வயது 40) என்பவரே இவ்வாறு தீக்காயங்களுக்கள்ளாகி மரணித்தவராகும். இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
