ஏ.எம்.கீத் திருகோணமலை-
நேற்று மாலை சேருவில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தோப்பூர் நீணாக்கேனி கிராமம் மீது மேற்கொள்ளப்ட்ட தாக்குதல் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட தரப்பினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாராளமன்ற உறுப்பினர் மற்றும் மததலைவர்கள் மேலும் அரசாங்க அதிகாரிகள் உட்பட்ட அனைவர்களுடலான கலந்துரைடல் ஒன்று இன்று கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் அனைத்து தரப்பினரும் பங்குபற்றும் குழு ஒன்று அமைக்கப்பட்டடு சகலரும் ஏற்றுக்கொள்ளும் முடிவொன்று எட்டப்பட சம்மந்தப்பட்ட தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும். இட அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வசிக்கும் தரப்பினருக்கு குந்தகம் ஏற்படாமலும் பயிர்செய்கை மேற்கொள்ப்பட்ட நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா கிழக்கு மாகாண ஆளுனர் திரு.ஒஸ்ரின் பெணான்டோ தெரிவித்தார்.