அமைச்சர் மனோவின் அலுவலகத்திற்குள் புகுந்த ஞானசார - இனவாதத்தை வெளிப்படுத்தினார்

இலங்கையின் இனவாதியாக செயற்பட்டு வரும் ஞானசார தேரர் இன்று தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கனேசனை அவரது அமைச்சில் சந்தித்து தனத இனவாதக் கருத்துக்களை கக்கியிருந்தார்.

இதன்போத வீட்டின் உரிமையாளர்கள் இருக்கும் போது வாடகைக்கு இருப்பவர்கள் எதைப்பற்றியும் கதைக்க கூடாது என தெரிவித்து நாட்டின் உரிமையாளர்கள் சிங்களவர்கள் என்றும் வாடகைக்கு இருப்பவர்கள் சிறுபான்மையினர் என்றும் தனது உரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அமைச்சர் மனோ கனேசன் இந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்றும்,அவர் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கே பொருத்தமானவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ இந்தப் பதவிக்கு தான் தகுதியானவன் என்று தான் உணர்வதாகவும்,யாருக்கு எந்தப் பதவி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

LIVE360
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -