தையல் இயந்திரம் கொடுத்து வாக்குப்பெறும் நிலையில் மு.கா இல்லை - கிழக்கு முதல்வர்

தையல் இயந்திரங்களைக் கொடுத்து வாக்குகளைப் பெறும் நோக்கில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படவில்லை என கட்சியின் பிரதித்தலைவரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இலங்கை முஸ்லிங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஒரே நோக்கிலேயே ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப்அவர்கள் உருவாக்கியுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் நசீர்அஹமட் குறிப்பிட்டார்.

கல்முனையில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியின் போது பலர் உயிரையும் உடமையயும் தியாகம் செய்துள்ளார்கள் அவர்கள் வெறும் சுயலாபத்துக்காக அத்தனையையும் தியாகம் செய்யவில்லை முஸ்லிங்களின் உரிமைகளை வாழவைக்க இந்தக் கட்சி வாழ வேண்டும் என நினைத்தே அந்த தியாகங்களை மேற்கொண்டுள்ளார்கள்,

ஆகவே அவர்களின் தியாகங்களுக்கு உண்மையான அர்த்தத்தை கொடுக்க வேண்டி கட்டாயம் எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் இளைஞர்களுக்கும் இருக்கின்றது,மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட நிம்மதியான சகல உரிமைகளுடனும் வாழும் முஸ்லிம் சமூகத்தை எமது தனித்துவத்துடன் தளைத்தோங்கச் செய்வதற்கான பொறுப்பு இளைஞர்களான உங்கள் கைகளில் தான் இருக்கின்றது,

மர்ஹும் அஷ்ரப் அவர்கள் எந்த நோக்கத்தில் கட்சியை உருவாக்கினார்களோ அந்த நோக்கம் தற்போது கைகூடும் சாத்தியங்கள் உருவாகியுள்ள இந்த நேரத்தில் விளையாட்டுத் தனமாக இருந்து விட்டு இறுதியில்கைசேதப்படுவதை விடுத்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுமையுள்ள தலைவரின் கரங்களை பலப்படுத்துவதே இந்த சந்தரப்பத்தில் நாம் செய்யும் மிகவும் புத்திசாலித்தனமான செயற்பாடாகும்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கொள்கையாலும் சேவைகளாலும் வீழ்த்த முடியாத பலர் இன்று அவதூறுகளையும் பழி சுமத்தியும் கட்சியை வீழ்த்தி விடலாம் என கனவு கண்டு கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று எமது கட்சித் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் பலஇடங்களில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, பொத்துவிலிலேயே 160 மில்லியன்செலவிலே ஹெட ஒயா குடிநீர்திட்டம் மட்டுமன்றி கல்முனை, அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, குருநாகல், பதுளை புத்தளம் என சொல்லிக் கொண்டே போகலாம் பல இடங்களில் தலைவரின் நிதியில் அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அது மட்டுமல்ல எமது பிரதியமைச்சர்களான ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் அவர்களின் அமைச்சுக்களுக்கூடாகவும் நிதியொதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன, இவர்கள் எல்லாம் தமது சொந்தக்காரர்களுக்கும் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்தப்படவில்லை, பாரபட்சமன்றி எம் சமூகத்துக்காக எம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே எம் கட்சிஎமக்கு கற்றுத் தந்திருக்கின்றது என்பதுடன் அதனையே நாம் இப்போது செய்து வருகின்றோம்.

ஆகவே கடந்த காலங்களில் பலருடைய சூழ்ச்சிகளினாலும் வஞ்சக வலைகளினால் அன்றைய ஆட்சியாளர்களால கட்டப்பட்டிருந்த எமது கட்சி இன்று வீரியத்துடன் வெற்றி நடை போட்டு எமது மக்களுக்குத்தேவையான விடயங்களை விரைவில் செய்து முடித்துக் கொண்டு வருவதைப் பொறுக்க முடியாத நிலையில்வௌிநாட்டு சூழ்ச்சியாளர்களுடன் இணைந்து உள்நாட்டு நயவஞ்சகர்கள் இன்று சதிவலை பின்னுகின்றார்கள்.

சதிகாரர்களுக்கு எல்லாம் பெரும் சதிகாரனான அல்லாஹ் ஒருவனை மறந்து அவர்கள் சதி செய்துகொண்டிருக்கின்றார்கள், இந்தக் கட்சியை இதுவரை காலமும் பல சதிகளிலிருந்து காப்பற்றிய இறைவன் இந்தசதிகாரர்களுக்கும் நல்லபாடத்தை கற்பிப்பான் என்பதை மிகத் தௌிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -