திபேத் நாட்டின் சிரேஷ்ட பௌத்த பிக்குவான கர்மாபா லோமா ஹெவத்தோயெ என்பவர் திருமணம் செய்துள்ள செய்தி ஒன்று வெளிநாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பிக்கு தனது இளம் வயதில் இருந்தே அந்த பெண்ணை அறிந்து வைத்துள்ளார். அவர்கள் இருவரும் 19 வருடங்கள் தொடர்பில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குறித்த பிக்குவுக்கு 33 வயதாகியுள்ள நிலையில், 36 வயதுடைய பெண் Rinchen Yangzomயே திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்கு தற்போது அந்த நாட்டில் இருந்து வெளியேறி, இந்திய நாட்டில் வசித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.