யாழில் ரயிலுடன் ஆட்டோ விபத்து - சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி தச்சன் தோப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழிற்கு சென்ற கடுகதி ரயிலுடன் குறித்த முச்சக்கரவண்டி இன்று(22) மதியம் மோதியது. இதன் போது சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -