தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரித்தானிய நாட்டின் ‘எடின்பார்க்’ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் இளைஞர் கழகத்தின் தலைவர்களான ஏ.ஏ.எம்.அஸ்லம் சிப்னாஸ், எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஆகியோர் சர்வதேச ‘வெண்கல’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 2.00 மணிக்கு கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவர்களுக்கான விருது வழங்கப்படவுள்ளது. இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இவர்களுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் இவர் சாய்ந்தமருது ரிலெக்ஸ், செரண்டிப் இளைஞர் கழகம், சர்வதேச விருதுப்பிரிவின் தலைவர்களும் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்களும். தேசிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் மாநாடுகளில் மற்றும் பல்வேறு நிகழ்வில் பங்கேற்றவர்களும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர்களும் ஆவர்.
இவ் விருதினைப் பெற்றுத்தர பல தியாகத்தினையும், அர்பனிப்பையும் புரிந்த முன்னாள் இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.றிஸான் அவர்களுக்கும் சாய்ந்தமருது இளைஞர் கழகம், சம்மேளனத்தின் சர்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
