எம்.ரீ.ஹைதர் அலி-
வாகரை- கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கேணிநகர் கிராமத்திலுள்ள அக்பர் தைக்கா வீதி, அக்பர் தைக்கா குறுக்கு வீதி, எல்லை பள்ளி குறுக்கு வீதி மற்றும் அறபா வீதி என்பன மிகவும் பழுதடைந்த நிலையில் குண்றும், குழியுமாக காணப்படுவதாகவும், அங்குள்ள மக்கள் இவ்வீதியினை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் இதனை புனர்நிர்மானம் செய்து தருமாறு கேணிநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தனர்.
இங்குள்ள மக்களின் நலன்கருதி குண்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகளை சமப்படுத்தி புனர்நிர்மானம் செய்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வாகரை பிரதேச சபையின் செயலாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பணிப்பரை விடுத்திருந்தார்.
அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இவ்வீதி வேலைளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் ஆரம்பித்து வைக்க வேண்டுமென கேணிநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கேட்டுக் கொண்டதற்கினங்க 2017.02.06ஆந்திகதி-திங்கட்கிழமை (இன்று) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆரம்பித்து வைத்தார். மேலும் குண்றும் குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட இவ்வீதிகளை சமப்படுத்தி பொதுமக்கள் எதுவித சிரமமுமின்றி பயணிக்கும் வகையில் தீர்வினை பெற்றுக்கொடுத்தமைக்காக பொதுமக்கள் சார்பாக நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக். கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், வாகரை-கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ். இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, ணேிநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல். அப்துல் ஹமீட் மற்றும் உறுப்பினர் எஸ்.எம்.எம். ஹூசைன் (ஜே.பீ.) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்தோடு, கேணிநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி ஆகியோர் 2016.09.18ஆந்திகதி-ஞாயிற்றுக்கிழமை கேணிநகர் கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.