பேருந்தில் பெண்ணொருவரின் கைப்பையை கொள்ளையிட்ட இரண்டு பெண்கள் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 27ஆம் திகதி பொரள்ளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பேருந்தில் சென்ற பெண்ணொருவரின் கைப்பை கொள்ளையிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபா பணமும் கடன் அட்டையும் இருந்துள்ளது. கொள்ளையிடப்பட்ட கடன் அட்டையை பயன்படுத்தி பொரள்ளையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் 27 ஆயிரத்து 705 ரூபாவுக்கு இந்த பெண்கள் ஆடைகளை கொள்வனவு செய்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட கடன் அட்டையை பயன்படுத்தி பெண்கள் ஆடைகளை கொள்வனவு செய்வது விற்பனை நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன. பாதுகாப்பு கெமராக்களில் பதிவான சந்தேக நபர்களான பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன் பெண்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.