ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் உறுப்பினரான அன்சில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்பீட உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (28) அதன் தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் கட்சித் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலமுனை அமைப்பாளர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் அன்சில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, வெற்றிடமாகவுள்ள கட்சியின் தவிசாளர் பதவிக்கு எஸ்.டி.எல். மஜீதை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.