களுத்துறை, அளுத்கம பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று நோய் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த இரு மாணவர்களைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது தாங்கள் தொடர்பு வைத்ததாக மொடலிங் கலைஞர் ஒருவரின் பெயரை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மொடலிங் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த நபரை சிறைச்சாலையில் தனியான ஓரிடத்தில் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை வட்டாரங்கள் மேற்கொண்டிருந்தன.பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்த இரு மாணவர்களின் பெற்றோர்களும் வெளிநாடுகளில் தொழில் செய்வதாகவும் உறவுமுறை பெண் ஒருவருடனேயே இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.