மு.இராமச்சந்திரன்-
21 வயதிற்கு குறைந்தவர்க குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 30 பேருக்கு தலா 2500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அட்டன். டிக்கோயா. நோர்வூட் .நகர வர்த்தர்களுக்கே இவ்வாறு அட்டன் மாவட்ட நீதிமன்றில் 29.03.2017 தண்டம் வீதிக்கப்பட்டுள்ளது.
அட்டன் மதுவரி திணைக்களத்தினரினால் 28.03.2017 மாலை திடீர் நோர்வூட் அட்டன் டிக்கோயா நகர வர்த்த நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சோதணையிடப்பட்டது இதன் போது 2006 ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின்படி 21 வயதிற்கு கிழ் உள்ளவர்களுக்கு சிகரட் விற்பனை செய்யத குற்றச்சாட்டின் படி மேற்படி 30 வரேத்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அட்டன் மாவட்ட நீதவான் பிரசன்ன லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குற்றத்தை ஒப்பூக்கொண்டமைக்கமைய தலா 2500 ரூபா தண்டம் வீதித்து விடுதலை செய்யததாக அட்டன் மதுவரி திணைக்கள பொருப்பதிகாரி பி.எம்.பீ.திலகரத்ன தெரிவித்தார்.