மு.இராமச்சந்திரன்-
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மேதினக்கூட்டம் டிக்கோயா நகரில் நடத்தவுள்ளதாக முன்னனியின் மலையக பிராந்திய இணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறு அன்று பகல் 1.00மணிக்கு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள முன்னணியின் இணைப்புச்செயலகத்தில் செயலாளர் நாயகம் இரா.ஸ்ரீ இராஜ ராஜேந்திரா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் தமிழ் பேசும் மக்களின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் கட்சியின் அரசியல் பணிகளை வடக்கு கழக்கு மலையக பகுதிகளில் விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டு சகல மாவட்டங்களுக்கும் மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள் அதோடு மேதினத்தை மலையகத்திலும் நடாத்துவதென்றும் கட்சியின் தேசிய மாநாட்டை வவுனியாவிலும் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது மேற்படி பொதுக்குழுக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு மலையக பகுதிகளிருந்து கட்சியின் பொதுக்குழுஉறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்