மட்டக்களப்பு ஆலங்குளம் கிராமத்தின் காட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ட்டக்களப்பு ஆலங்குளம் கிராமத்தின் காட்டுப் பகுதியில் இருந்து புதன்கிழமை (08.02.2017) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், மாவடிவெம்பு கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் தனாப்பிரியன் (வயது 23) என்பவரது சடலமே மீட்கப்பட்டதாகவும் சடலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளும், கைப்பேசியும் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கனரக வாகன சாரதியான இவர் மாவடிவெம்புக் கிராமத்தில் திருமணம் முடித்துள்ளதோடு மூன்று வயதுக் குழந்தையின் தந்தை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இவர் ஆலங்குளக் கிராமத்தில் வசிக்கும் தனது பெற்றோரிடம் சென்றிருந்தார் என்றும் புதன்கிழமை காலையில் ஆலங்குளக் கிராம காட்டிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -