ஒரு சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில்,“மன்மோகன்சிங் ஆட்சியின் போது ஒரு திட்டமும் செயல்படவில்லை. ஏராளமான ஊழல்கள் தான் நடந்தன. அந்த ஆட்சியில் ஒருவர் மழை கோட்டு போட்டுக் கொண்டு குளிக்கிறார்'' என்று கிண்டல் செய்து பேசி இருந்தார்.அந்தப் பேச்சுக்கு நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுடச் சுட பதிலளித்தார்.
காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று லக்னோவில் வெளியிட்டு வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ''பிரதமர் மோடியின் வேலை என்ன தெரியுமா? ஜாதகம் பார்ப்பது, கூகிளில் தேடிக் கொண்டிருப்பது மற்றும் அடுத்தவரின் குளியலறையை எட்டிப் பார்ப்பதான் அவரது அன்றாட வேலை. அவர் பிரதமர் பதவியில் தோல்வி அடைந்து விட்டார். உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். !''
இவ்வாறு ராகுல் காந்தி கேலியும் கிண்டலும் கலந்த தொனியிற் கூறினார்.