குளியலறையை எட்டிப் பார்க்கும் பிரதமர் மோடி!

எஸ். ஹமீத்-

ரு சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில்,“மன்மோகன்சிங் ஆட்சியின் போது ஒரு திட்டமும் செயல்படவில்லை. ஏராளமான ஊழல்கள் தான் நடந்தன. அந்த ஆட்சியில் ஒருவர் மழை கோட்டு போட்டுக் கொண்டு குளிக்கிறார்'' என்று கிண்டல் செய்து பேசி இருந்தார்.அந்தப் பேச்சுக்கு நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுடச் சுட பதிலளித்தார்.

காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று லக்னோவில் வெளியிட்டு வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ''பிரதமர் மோடியின் வேலை என்ன தெரியுமா? ஜாதகம் பார்ப்பது, கூகிளில் தேடிக் கொண்டிருப்பது மற்றும் அடுத்தவரின் குளியலறையை எட்டிப் பார்ப்பதான் அவரது அன்றாட வேலை. அவர் பிரதமர் பதவியில் தோல்வி அடைந்து விட்டார். உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். !''

இவ்வாறு ராகுல் காந்தி கேலியும் கிண்டலும் கலந்த தொனியிற் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -