சாதித்த என்னை சமூகம் கண்டுகொள்ளவில்லை : அட்டாளைச்சேனை மிப்ரான்

மொஹமட் மிப்ரான் கிழக்கு மாகாணத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.72அ தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது மாத்திரமின்றி 2016ம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுனராகவும் தெரிவு செய்யப்பட்டார். இவர் கிழக்கு மாகாணம் சார்பில் இச்சாதனையைப் புரிந்த முதல் மகன். முஸ்லிம் சமூகம் சார்பாகக்கூட இந்நாட்டு வரலாற்றில் இப்படியொரு சாதனையை இதற்கு முன் யாரும் நிலைநாட்டியிருக்கவில்லை. தற்போது இராணுவ விளையாட்டுப் பிரிவில் வை.கே குலரத்ன மற்றும் அம்பாறை மாவட்ட பயிற்சியாளர் எஸ்.எல் தாஜூதீன் ஆகியோரின் பயிற்றுவிப்பின் கீழ் மிப்ரான் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை கௌரவிக்கும் முஸ்லிம் சமூகம் இத்தகைய மகத்தான சாதனையாளர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையான விடயம். இந்த வருடத்தில் இடம்பெற இருக்கின்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுப்பதை இலக்காகக் கொண்டு கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்ற மிப்ரான் அவரது கடினமான தடங்களையும் உணர்வுகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

கே: கடந்த வருடம் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர்தான் மொஹமட் மிப்ரான். உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தாருங்கள்?

ப: நான் கிழக்கு மாகாணத்தின் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். 1992ம் ஆண்டு ஏப்ரல் 20ம் திகதி பிறந்தேன். க.பொ.த உயர்தரம் வரை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தேன். எனது குடும்பத்தில் உம்மாவும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். தந்தை என்னுடைய 13வது வயதில் மரணித்துவிட்டார;.

கே: உங்களது துறை விளையாட்டு என்பதை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டீர்கள்?

ப: நான் 2005 இல் இருந்து விளையாட்டில் கால்பதிக்க ஆரம்பித்தேன். அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைதான் என்னை உருவாக்கியது. விளையாட்டுத்துறை ஆசிரியர்களான பிர்னாஸ் மற்றும் இஸ்மாலயன் ஆகியோர் எனது உருவாக்கத்தில் பெரும் பங்காற்றினர். அதேபோன்று பாடசாலை அதிபர் ஸைபுதீன் சேரையும் மறந்துவிட முடியாது. இன்று தேசிய ரீதியாக சாதிப்பதற்கு அடித்தளமிட்ட எனது பாடசாலையை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

கே: பாடசாலைக் காலத்தில் விளையாட்டில் உங்களது ஈடுபாடு எப்படி இருந்தது?

ப: 2005ம் ஆண்டு நான் மாணவனாக இருக்கும் போது வட- கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்குபற்றினேன். இதில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. இதன் பிறகு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு 2007ம் ஆண்டு கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் முதலிடம் பெற்றதோடு மாகாண சாதனையையும் நிலைநாட்டினேன். 2008, 2009ம் ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்றேன்.

கே: நீளம் பாய்தல் போட்டிகளில் தேசிய மட்டத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற ஒரு வீரர் மிப்ரான். தேசிய ரீதியான உங்களது அடைவுகள் பற்றி?

ப: 2010ம் ஆண்டு கண்டி நாவலப்பிட்டியில் நடைபெற்ற யூத் சம்பியன்ஷிப் போட்டிகளில் நீளம் பாய்தலில் 6.96அ தூரம் பாய்ந்து சாதனையைப் பதிவு செய்ததோடு சிறந்த மெய்வல்லுனராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2011ம் ஆண்டு கொழும்பு தியகமவில் இடம்பெற்ற யூத் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் 7.04அ தூரம் பாய்ந்து எனது முந்தைய சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பெற்றேன். அதன்பிறகு 2014ம் ஆண்டு Army சம்பியன்ஷிப் போட்டிகளில் 7.36m தூரம் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றேன். அதேபோன்று 2015 இல் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 7.25m தூரம் பாய்ந்து மூன்றாவது இடம்பிடித்தேன். 2016ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவிலும் 7.16m தூரம் பாய்ந்து மாகாண மட்ட சாதனையைப் பதிவு செய்தேன். இறுதியாக கடந்த வருடம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த 42வது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டிப் பிரிவில் 7.72m தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததோடு ஜனாதிபதியின் கரங்களால் ஆண்களுக்கான சிறந்த மெய்வல்லுனருக்கான விருதையும் பெற்றுக் கொண்டேன்.

கே: 2016ம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுனர; விருதை ஜனாதிபதியின் கரங்களால் பெற்றுக் கொண்டீர்கள். இந்த கௌரவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் காணப்பட்டதா?

ப: உண்மையில் சிறந்த மெய்வல்லுனருக்கான விருது கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 2016இல் இடம்பெற்ற Army சம்பியன்ஷிப் போட்டிகளில் 7.75அ தூரம் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றேன். இதன் பிறகுதான் வர இருக்கின்ற தேசிய விளையாட்டு விழாவில் முதலிடம் பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. எனது நண்பர்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். என்னை ஊக்கப்படுத்தினார்கள். இது எனது நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியது எனலாம். நீளம் பாய்தலில் தேசிய சாதனையை வைத்திருக்கின்ற (7.86m) அமில ஜயசிறியையும் வீழ்த்தியே நான் இந்த கௌரவத்தைப் பெற்றிருக்கிறேன்.

கே: பொதுவாக விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்கு குடும்பம் தடையாக இருக்கும். பிள்ளைகள் விளையாட்டில் சாதிப்பதை விட கல்வியில் சாதிக்க வேண்டும் என்றுதான் அதிகமான பெற்றோர் விரும்புவர். இதற்கு மிப்ரானுடைய குடும்பம் விதிவிலக்கா?

ப: இவ்வாறு நான் பல சாதனைகளைப் புரிவதற்கு எனது குடும்பம் பக்கபலமாக அமைந்தது. எனது இரண்டு மச்சான்மார்களும் நிறைய ஒத்தழைப்புக்களை வழங்கியுள்ளனர். இன்னும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். வாப்பாவும் மரணிப்பதற்கு முதல் நிறையவே என்னை ஊக்கப்படுத்தினார்.

கே: தேசிய ரீதியாக ஆண்டின் சிறந்த மெய்வல்லுனர் என்ற கௌரவத்தை கிழக்கு மாகாணத்துக்கு பெற்றுக் கொடுத்தீர்கள். இந்த சாதனையை சமூகம் எப்படிப் பார்த்தது?

ப: கிழக்கு மாகாண வரலாற்றிலே நான்தான் முதற்தடவையாக சிறந்த மெய்வல்லுனராக தெரிவு செய்யப்பட்டேன். என்றாலும் மாகாண மட்டத்திலோ, சமூக மட்டத்திலோ என்னை யாரும் பாராட்டவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. ஊரிலுள்ள எனது விளையாட்டுக் கழகம் மாத்திரம் வாழ்த்துத் தெரிவித்தது. வேறு எந்த முஸ்லிம் தலைவர்களும், அரசியல்வாதிகளும் என்னைப் பாராட்டவில்லை. இவ்வாறு வரலாற்று சாதனையை இந்த மாகாணத்துக்கு ஈட்டிக் கொடுத்தும் யாரும் என்னை கவனத்தில் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது.

கே: உங்களது கடினமான சாதனைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள் பற்றி…

ப: 2005இல் இணைந்த வட- கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பங்குபற்றினேன். என்றாலும் என்னால் அப்போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. உண்மையில் இந்தத் தோல்வியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னொருவகையில் சொல்லப்போனால் இந்தத் தோல்விதான் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது.

கே: விளையாடுகின்ற அல்லது பயிற்சிகளை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை இனத்தவர; என்ற ரீதியில் உங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றதா?

ப: அவ்வாறு எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை. முஸ்லிம், தமிழர;, சிங்களவர; என்ற வித்தியாசம் விளையாட்டு வீரர;களுக்கிடையில் காட்டப்படுவதில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர; தயாசிறி ஜயசேகரவும் விளையாட்டு வீரர;களை அவர;களது திறமைகளை அடிப்படையாக வைத்தே முதன்மைப்படுத்துகிறார;. எனக்கு தற்போது பயிற்சி அளிப்பவரும் சிங்கள சமூகத்தைச் சேர;ந்தவரே.

கே: அண்மையில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் சர்வதேச ரீதியாக சிறந்த வீரர்களை களமிறக்கும் நோக்கில் 16 வீரர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கடந்த ஆண்டின் சிறந்த மெய்வல்லுனராகத் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் ஏன் உள்ளடக்கப்படவில்லை?

ப: இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. என்றாலும் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த வருடத்தில் இடம்பெற்ற போட்டிகளில் சிறந்த அடைவைப் பெற்றவருக்கே அந்த வாய்ப்புக் கிடைக்கும்.

கே: இறுதியாக உங்களது இலட்சியம் தொடர்பாகக் கூறுங்கள்?

ப: இந்த வருடம் இடம்பெற இருக்கின்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முதலில் தெரிவாக வேண்டும். அதன்பின் அல்லாஹ்வின் நாட்டத்தோடு எனது நாட்டுக்காக பதக்கமொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்காக நான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

நேர்காணல்- மிப்றாஹ் முஸ்தபா | உதவி- சாஜித் அலி.
நன்றி மீள்பார்வை.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -