நாசாவின் அந்தப் புதிய செய்தி இதுதான்!

எஸ். ஹமீத்-

ந்த பூமியைப் போன்றே காணப்படும் ஏழு புதிய கோள்களைத் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் மூன்று கோள்களில் மனிதர்கள் வாழக்கூடியவாறான சூழல் காணப்படுவதாகவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள கோள்கள் பற்றியும், அக்கோள்களில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல்கள் பற்றியும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதன்போது, ஸ்பிட்சர் மூலம் பூமியைப் போன்றே 7 புதிய கோள்களைக் கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், மூன்று கோள்களில் பூமியைப் போலவே மனிதர்கள் வசிக்கக் கூடியவாறான சூழல்கள் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இக்கோள்கள் பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்திருக்கின்றன.

நாசாவின் இந்த நேரலை ஒளிபரப்பை உலகில் 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல் கல்லாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -